இலங்கை

இலங்கையின் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி.

இன்று நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின் போது உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் விசேட அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

கடன் மறுசீரமைப்புத் திட்டம் இப்போது பொது நிதிக் குழுவிடம் சமர்ப்பிக்கப்படும்.

பொது நிதிக் குழு இந்த விவகாரத்தை வெள்ளிக்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள உள்ளது.

இதேவேளை, உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் விவாதிப்பதற்காக விசேட பாராளுமன்ற அமர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பாராளுமன்றம் சனிக்கிழமை கூடவுள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button