இலங்கை

குமுதினி படகுப் படுகொலை: நீதிக்காக ஏங்கும் ஒரு வரலாற்றுத் துயரம்!

 

சிறிலங்கா கடற்படையால் குமுதினிப் படகில் நெடுந்தீவிலிருந்து பயணம் செய்த 36 தமிழர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 41 ஆண்டுகள்…

மே 15, 1985 — ஈழத் தமிழ் மக்களின் வரலாற்றில் என்றும் மறக்க முடியாத, குருதி தோய்ந்த ஒரு கருப்பு தினம். நெடுந்தீவிலிருந்து புங்குடுதீவு நோக்கிப் பயணித்த ‘குமுதினி’ என்ற பயணிகள் படகில் அரங்கேறிய கொடூரமே “குமுதினி படகுப் படுகொலைகள்” என்று அழைக்கப்படுகிறது.

சம்பவத்தின் பின்னணி
அன்று காலை, நெடுந்தீவுத் துறையிலிருந்து 64 தமிழ் மக்களுடன் குமுதினி படகு தனது வழக்கமான பயணத்தைத் தொடங்கியது. நடுக் கடலில் நடுக்கூட்டப் பகுதியில் இப்பயணிகள் படகு வந்துகொண்டிருந்தபோது, சிறிலங்கா கடற்படையினரால் மறிக்கப்பட்டது.

துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டிய கடற்படையினர், படகிற்குள் புகுந்து அங்கிருந்த பயணிகளை ஒவ்வொருவராகப் படகின் தட்டிற்கு (Deck) அழைத்து, மிகக் கொடூரமான முறையில் கத்திகளாலும் கோடரிகளாலும் வெட்டிக் கொலை செய்யத் தொடங்கினர்.

பாதிக்கப்பட்டவர்கள்
இந்தக் கொடூரத் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் எனப் பாகுபாடின்றி 36 தமிழர்கள் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.

• இளம் பலி: சுபாஜினி விசுவலிங்கம் என்ற 7 மாதக் குழந்தை.
• முதிர்ந்த பலி: ஜே. தெய்வானை என்ற 70 வயது முதியவர்.

படகிலிருந்த ஏனைய 30க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன், மரணப் போராட்டத்திற்கு மத்தியில் உயிர் தப்பினர். அவர்கள் மூலம் தான் உலகிற்கு இந்த மாபெரும் மனிதப்பரப்புப் படுகொலை வெளிச்சத்திற்கு வந்தது.
நீதியின்றித் தொடரும் துயரம்

“நீதி சாகாது என்று நம்பும் எங்களுக்கு நீதி மறுக்கப்பட்ட / வழங்கப்படாத ஒரு துயரத்தின் கதை!”

இச்சம்பவம் நடந்து பல தசாப்தங்கள் கடந்துவிட்ட போதிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்றுவரை எந்தவொரு நீதியோ, நட்டஈடோ கிடைக்கவில்லை. குற்றவாளிகள் எவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படவில்லை.

சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்த இந்த கொடூர நிகழ்வு, ஈழத் தமிழர்களின் கூட்டு நினைவிலும், நீதிக்கான போராட்டத்திலும் ஒரு அழியாத வடுவாக இன்றும் நிலைத்து நிற்கிறது.

அன்றிலிருந்து இன்று வரை சிறிலங்கா அரச பயங்கரவாதத்தின் கோரப் பசி தணியவுமில்லை!
எம் மக்களிற்கு நீதி கிடைக்கவுமில்லை! கேட்க நாதியுமில்லை!

#குமுதினிபடுகொலை #நெடுந்தீவு #புங்குடுதீவு #மே15 #தமிழீழம்
#தமிழீழத்தமிழர்வரலாறு #சுவிஸ்தமிழர்தகவல்மையம்
#KumudhiniMassacre
#KumudhiniBoatMassacre
#TamilGenocide
#SriLankaStateTerrorism
#JusticeForTamils
#May15 #Neduntheevu
#Tamileelam #SwissTamil #SwissTamilInfo

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button