தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலையொட்டி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களால் மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

தியாகி திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் வாரம் தாயகமெங்கும் உணர்ச்சியுடன் நடைபெற்று வரும் நிலையில் யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் நேற்று (25.09.2023) மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

அதன்போது, யாழ். நகர் பகுதி, மருதனார்மடம் சந்தை பகுதி மற்றும் நல்லூர் தியாக தீபம் திலீபன் நினைவுத்தூபி அமைந்துள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்