
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால். தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தினை முன்னிட்டு துண்டுப்பிரசுர விநியோகம் கடந்த வியாழன் முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள், தனியார் கல்வி நிறுவனங்களை மையப்படுத்தி தியாக தீபத்தின் வரலாற்று நினைவுகளை உள்ளடக்கிய துண்டுபிரசுரம் விநியோகிக்கபட்டுள்ளது.
தொடர்ச்சியாக மறு நாள் காலை வவுனியா மாவட்டத்திலும் மதியம் மன்னார் மாவட்டத்திலும் துண்டுப்பிரசுரம் விநியோகம் இடம்பெற்றுள்ளது.








