சுவிஸ் நாட்டில் திச்சினோ மாநிலத்தில் 8வது முறையாக சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினால் நடாத்தபட்ட sports4rights விளையாட்டுப்போட்டி 03.09.2023 Mendrisio நகரில் Via Agostino Maspoli என்னும் இடத்தில் இடம்பெற்றிருந்தது.

தமிழர்களுக்காக அகிம்சை வழியில் போராடிய தியாக தீபம் திலீபன் அண்ணா, தமிழ் மாணவர் அமைப்பின் முதலாவது தற்கொடையாளரான பொன் சிவகுமார் அண்ணா ஆகியோரது நினைவு கோரலுடன் இவ் விளையாட்டுப்போட்டி இடம்பெற்றிருந்தது.

இவ் விளையாட்டுப் போட்டியில் உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம் (set up / overgame) பூப்பந்தாட்டம், சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள் மற்றும் பார்வையாளகளுக்கான விளையாட்டுகளும் இடம்பெற்றிருந்தது.

இவ் விளையாட்டு விழாவானது திச்சினோ மாநில அரசின் ஆதரவுடன் இடம்பெற்று வருகின்றமை விசேட அம்சமாகும் அத்துடன் இவ் விளையாட்டுப்போட்டியில் Mendrisio நகர ஆட்சி மேயர் Sindaco Samuele Cavadini கலந்து சிறப்பித்தமையும் சிறப்புக்குரிய விடயமாக அமைந்திருந்தது.

இவ் விளையாட்டுப் போட்டியில் 8 வேற்றுநாட்டவர்களது அணிகளும் அவர்களது நாட்டினை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றுவதும் சிறப்பம்சமாகும்.

இம்முறையும் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டியை சிறப்பித்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவிக்கின்றனர் தமிழ் இளையோர் அமைப்பு – சுவிற்சர்லாந்து அங்கத்தவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்