(காணொளி இணைப்புக்கள் கீழே)

தமிழீழமே எமக்கு வேண்டும் என்ற உரிமைக்குரலுடன்  6  ம் நாளாக தொடரும் ஈருருளிப்பயணம் 

பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்து நெதர்லாந்தின் ஊடாக பயணித்து தற்போது பெல்சியத்தில் தொடர்ந்துகொண்டிருக்கும் மனித நேய ஈருருளிப்பயணம் இன்று காலை 05.09.2023 அன்று லிமல் நகரத்திலிருந்து அகவணக்கத்துடன் ஆரம்பமானது .தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி வாவ்ர் நாமூர் மற்றும் வன்சு மாநகர சபையில் தமிழர்களுடைய கோரிக்கை அடங்கிய மனு கையளிக்கப்பட்டது. 

நேற்றைய நாள் ஐரோப்பிய ஒன்றியத்தில், தொடரும் தமிழின அழிப்பின் வலி நிறைந்த பதிவுகளையும் அதற்கான நீதியினையும் வலியுறுத்தும் மனு ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு, தமிழீழமே எமக்கான அரசியல் தீர்வு என்பதனை வலியுறுத்தி அறவழியில் ஈருருளிப்பயணத்தினை மேற்கொள்ளும் செயற்பாட்டாளர்களை அன்புடன் வரவேற்று,தமிழர்கள் என்ற உணர்வுடன் இறுகப்பற்றி இணைந்து பயணிக்க அன்புரிமையுடன் அழைக்கிறோம்.

தொடரும் அறவழிப்போராட்டம் யேர்மனி, பிரான்சு, சுவிஸ் ஊடாகப் பயணித்து 18.09.2023 அன்று ஜெனிவாவில் அமைந்துள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை முன் நடைபெறவுள்ள மாபெரும் போராட்டத்துடன் இணையவுள்ளது .இப்போராட்டத்தில் இனமான உணர்வுடன் அனைத்து உறவுகளும் இணைந்து ஒரணியில் உரிமைக்குரல் எழுப்பிடுவோம்.

வாருங்கள்…

“விடுதலைப் போராட்டத்தில் மக்கள் வெறும் பார்வையாளராக இராது, நேரடிப் பங்காளிகளாக மாறவேண்டும்” 

– தமிழீழத் தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன்.

மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்