முல்லைத்தீவு மற்றும் மன்னார் மனிதப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேசம் தீவிர கவனத்தை செலுத்த வேண்டும் என்று காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், தமிழர் பகுதிகளிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றினால், மேலும் பல மனித புதைக்குழிகளை கண்டறிய முடியும் என்றும் இவர்கள் தெரிவித்தனர்.

மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினர் இன்று, மன்னார் பசார் பகுதியில் போராட்டமொன்றில் ஈடுபட்டனர்.

மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தின் தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலேயே இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இதன்போது கருத்து வெளியிட்ட மனுவல் உதயச்சந்திரா, தமிழ் பகுதிகளில் உள்ள இராணுவ முகாம்களை அங்கிருந்து அகற்றினால், பல புதைக்குழிகளை கண்டறிய முடியும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்