முல்லைத்தீவில் பெண் போராளிகளின் உடைகளுடன் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு- கொக்குத்தொடுவாய் மத்தி பகுதியில் தேசிய நீர்வளங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்காக கனரக இயந்திரம் கொண்டு நிலத்தினை தோண்டியுள்ளார்கள்.

இதன்போது மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து கொக்கிளாய் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இது பெண் போராளிகளின் தடையங்களாக காணப்படுகின்றது .

பெண்களின் மேலாடை மற்றும் பச்சை சீருடை மற்றும் எலும்பு எச்சங்கள் என்பன இதன்போது இனம் காப்பட்டுள்ளன.

மேலும் இது தொடர்பில் கொக்குளாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்