கொழும்பு துறைமுக நகரத்தில் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாக China Harbour Engineering ஒத்துழைப்பு தெரிவித்துள்ளது.

பெய்ஜிங்கில் இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி மற்றும் CHEC இன் தலைவர் Bai Yinzhan ஆகியோருக்கு இடையில் இன்று இடம்பெற்ற சந்திப்பைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சர்வதேச நிதி மையத்துடன் CHEC தனது முதலீடுகளை ஆரம்பிக்கும் என சீனாவில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சீனாவின் Exim வங்கி தலைவர் ஆகியோருக்கிடையில் சந்திப்பில் கடன் மறுசீரமைப்பு செயல்முறை குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் வளர்ச்சிக்கு சீனாவின் Exim வங்கி ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்